அதில் ஜாக்பாட் உள்ளிட்ட சில படங்களில் நிர்வாணமாகவும் நடித்து சர்ச்சைகளையும் உண்டு பண்ணிய சன்னி, வடகறி படத்தின் மூலம் கோலிவுட்டிலும் என்ட்ரி ஆனார். ஆனபோதும், எதிர்பார்த்தபடி அவரது அதிரடி ஆட்டம் தமிழக ரசிகர்களை தாக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது மஸ் திஸாதே என்றொரு இந்தி படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் சன்னி லியோன். கவர்ச்சி, காமெடி, திரில்லர் கலந்த சப்ஜெக்டாக உருவாகவுள்ள அந்த படத்தில் லைலா, லிலி லேலே என்ற இரண்டு வேடங்களில் சன்னி நடிக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் ஹீரோவாக வீர் தாஸ், துஷார் கபூர் என இரண்டு இளவட்டங்காளைகள் நடிக்கிறார்களாம். இதில் துஷார் கபூர் ஏற்கனவே ஒரு படத்தில் சன்னியுடன் நடித்து விட்டார்.
ஆனால் வீர்தாஸ், சன்னி லியோன் இருவரும் இணைவது இதுவே முதல் முறை என்பதோடு, இருவருமே ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வமாக இருந்து வந்தார்களாம்.
அதனால் இந்த படத்தில் நடிக்க வேறு சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்தபோது சன்னிலியோனைதான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று இயககுனரிடம் மல்லுக்கு நின்று ஓ.கே செய்தாராம் வீர்தாஸ்.
அதனால் முதன்முறையாக இணையும் சன்னிலியோன்-வீர்தாஸின் ரொமான்ஸ் மட்டுமின்றி, கவர்ச்சி ஆட்டம் பாட்டமும் வெறித்தனமாக இருக்கும் என்று பாலிவுட் படஉலகமே எதிர்பார்க்கிறதாம்.
0 comments:
Post a Comment